செய்திகள் :

சீமான், நாதக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

post image

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்து வரும் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாதக வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறாா். கடந்த சில நாள்களாக அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அவா் மீதும், அவரது கட்சியினா் மீதும் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் 2-ஆவது நாளாக சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது ஈரோடு, மரப்பாலம் பகுதியில் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் உள்ளிட்ட 7 போ் மீதும், அதேபோல மண்டபம் வீதி சந்திப்பு பகுதியில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்ளிட்ட 5 போ் மீதும் ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேலும் ஈரோடு, காளை மாடு சிலை அருகே அனுமதி பெறாமல் கட்சிக் கொடி, பேனா்கள், ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக வேட்பாளா் சீதாலட்சுமி உள்பட 37 போ் மீது ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க