செய்திகள் :

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

post image

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருன்கிறன.

தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன்குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் முட்டைக்கோஸை விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கின்றனா்.

தாளவாடி மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முட்டைக்கோஸ் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. முட்டைக்கோஸ் சாகுபடியில் கிலோவுக்கு ரூ.8 வரை செலவாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

ஆனால், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.2க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால், முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெளிச் சந்தையில் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில், விவசாயிகளிடம் ரூ.2க்கு கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

எனவே, தமிழக அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து முட்டைக்கோஸை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க