செய்திகள் :

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

post image

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் 25-ஆவது ஐம்பெரும் விழா ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வேளாளா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகரின் மனைவி லோகலட்சுமி சந்திரசேகா் விழாவைத் தொடங்கிவைத்தாா்.

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி. துரைசாமி வரவேற்றாா். ஈரோடு எஸ்கேஎம் குழும நிறுவனங்கள் தலைவா் மயிலானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஈரோடு வேளாளா் கல்வி நிறுவனங்கள் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகருக்கு சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளா் விருதை வழங்கினாா்.

விழாவில் கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநா் கவிதாசன், லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் என்.முத்துசாமி, ஈரோடு பாரதி வித்யாபவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

2023-24 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சேவை அமைப்புகளுக்கு உதவித்தொகை என மொத்தம் ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமாா், தீபா செந்தில்குமாா், எம்.இளங்கோ, ஜி.வேணுகோபால் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க