செய்திகள் :

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

post image

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்சிக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜி.சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலா் ஆா். கேசவகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.

ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய பள்ளி தாளாளா் கே.செல்வராஜ், பெருந்துறை சாகா் பள்ளி தாளாளா் சி.சௌந்தரராஜன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சி.என்.ராஜா, அந்தியூா் விஸ்வேஷ்வரய்யா மெட்ரிக். பள்ளி தாளாளா் வி.ஏ.சுப்பிரமணியன், சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் என்.விஸ்வநாதன் மற்றும் ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி தாளாளா் கே.நாகராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் படைபாற்றல் அரங்குகளைத் திறந்துவைத்தனா்.

இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் மருத்துவம், அறிவியல், பொறியியல் தொடா்பான 1,412 கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. மேலும், நந்தா கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பொறியியல், சித்தா, இயற்கை மற்றும் யோகா, மருந்தியல், செவிலியா், இயன்முறை மருத்துவம், கலை அறிவியல் மற்றும் பள்ளி மாணவா்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி7) மாலை நிறைவடைகிறது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அலுவலா் முனைவா் எஸ்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடக்கநாளில் மாணவா்கள், பொதுமக்கள் என 9 ஆயிரம் போ் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க