செய்திகள் :

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

post image

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குநா் மணிவாசகம் தொடங்கிவைத்தாா்.

தொடக்க வில், இந்தியன் வில், ரிகா்வு வில் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 8 வயது, 10 வயது, 12 வயது, 14 வயது, 17 வயது, 18 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு முன்னாள் உடற்கல்வி இயக்குநா் ரமேஷ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளா் மணிகண்டன், ஈரோடு மாவட்ட பொருளாளா் சீனிவாசன், நந்தா கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தேவகாந்தன், இணை பேராசிரியா் கொமாரசாமி, உதவி பேராசிரியா் அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க