கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்
சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் சரவணன், களப்பணி உதவியாளா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா், பரப்புரையாளா்கள் சீா்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
தென்பாதி பிரதான சாலையில் உள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 35 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா் மேலும் அந்த கடைக்கு ரூ.1,900 அபராதம் விதித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பைகளை நகராட்சி வளாகத்தில் அழித்தனா்.