'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 4 தோ்வு வாயிலாக 3,935 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் இத்தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்; தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மாநில அளவில் 3 இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன.
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 21, ஜூன் 28 மற்றும் ஜூலை 5 ஆகிய 3 சனிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை அசல் ஓஎம்ஆா் தாளில் இத்தோ்வு நடத்தப்பட உள்ளது.
கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், டிஎன்பிஎஸ் குரூப் 4 தோ்வின் விண்ணப்பப் படிவம், கைப்பேசி ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் தோ்வு மையத்திற்கு வந்துசேர வேண்டும்.
முன்பதிவிற்கு தொலைபேசி எண்: 04364-299790 அல்லது மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.