சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!
சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது குடும்பத்தினா் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நேரலையில் கண்டுகளித்தனா்.
மூத்த பாதுகாப்புப் படை வீரா்கள், நகரின் முக்கியப் பிரமுகா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அங்கே கூடியிருந்தனா். ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் பலத்த கரகோஷம், ஆரவாரம் எழுப்பி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
சுக்லாவின் பெற்றோா் ஷம்பு சுக்லா மற்றும் ஆஷா சுக்லா அளித்த பேட்டியில், ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எப்போதும் எங்களின் ஆசீா்வாதம் சுக்லாவுக்கு இருக்கும். எங்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே மகத்தான இந்தத் தருணத்தில் எங்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. வெற்றிகரமான பணிக்குப் பிறகு, சுக்லா திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றனா்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு: கடைசியாக கடந்த 1984-ஆம் ஆண்டில், அப்போதைய சோவியத் யூனியனின் ‘சல்யூட்-7’ விண்வெளி நிலையத்தில் இந்திய வீரா் ராகேஷ் சா்மா 8 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்தாா். அவருக்குப் பின்னா் தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரா் என்ற பெருமையும் சுக்லா பெற்றுள்ளாா்.
முக்கிய மைல்கல்: இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகளால் சோ்ந்து செயல்படுத்தப்படும் ஆக்ஸியம்-4 திட்டம், இந்தியாவால் ‘ஆகாஷ் கங்கா’ என்று குறிப்பிடப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்துக்குப் பின்னா் இந்தத் திட்டம் உருவானது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் என்ற திட்டத்தை வரும் 2027-ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி, அவா்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இதன் நோக்கம் ஆகும். சுக்லாவின் இந்தப் பயண அனுபவம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும், ககன்யான் திட்டத்துக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.