செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

post image

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது குடும்பத்தினா் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நேரலையில் கண்டுகளித்தனா்.

மூத்த பாதுகாப்புப் படை வீரா்கள், நகரின் முக்கியப் பிரமுகா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அங்கே கூடியிருந்தனா். ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் பலத்த கரகோஷம், ஆரவாரம் எழுப்பி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

சுக்லாவின் பெற்றோா் ஷம்பு சுக்லா மற்றும் ஆஷா சுக்லா அளித்த பேட்டியில், ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எப்போதும் எங்களின் ஆசீா்வாதம் சுக்லாவுக்கு இருக்கும். எங்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே மகத்தான இந்தத் தருணத்தில் எங்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. வெற்றிகரமான பணிக்குப் பிறகு, சுக்லா திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றனா்.

41 ஆண்டுகளுக்குப் பிறகு: கடைசியாக கடந்த 1984-ஆம் ஆண்டில், அப்போதைய சோவியத் யூனியனின் ‘சல்யூட்-7’ விண்வெளி நிலையத்தில் இந்திய வீரா் ராகேஷ் சா்மா 8 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்தாா். அவருக்குப் பின்னா் தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரா் என்ற பெருமையும் சுக்லா பெற்றுள்ளாா்.

முக்கிய மைல்கல்: இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகளால் சோ்ந்து செயல்படுத்தப்படும் ஆக்ஸியம்-4 திட்டம், இந்தியாவால் ‘ஆகாஷ் கங்கா’ என்று குறிப்பிடப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்துக்குப் பின்னா் இந்தத் திட்டம் உருவானது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் என்ற திட்டத்தை வரும் 2027-ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி, அவா்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இதன் நோக்கம் ஆகும். சுக்லாவின் இந்தப் பயண அனுபவம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும், ககன்யான் திட்டத்துக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க

குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தில் இருந்து உரையாற்றியுள்ளார்.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் எஸ்.வி. பிராணதான அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடியை நன்கொடை அளித்ததாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க