செய்திகள் :

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

post image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் இந்தக் குழுவில் தேர்வாகியிருந்தனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் சரியாக இந்திய நேரப்படி, பிற்பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஏவப்படுவதற்கு முன்னதாக, ஏவுகலன் தூக்கி நிறுத்தப்படுவதில் ஒரு சிக்கல் கண்டறிப்பட்டு அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டது.

ஃபால்கன்-9 ராக்கெட் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39 ஏ-விலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11-ல் நிலவுக்குச் செல்வதற்காக நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற அதே இடத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி குழந்தைகள் மற்றும் பிறருடன் கலந்துரையாடுவார் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 1984 ஆம் ஆண்டில் இந்திய வீரா் ராகேஷ் சர்மா விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பின்னர் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரர் என்ற பெருமையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகளால் சேர்ந்து செயல்படும் ஆக்ஸியம்-4 பணி, ‘மிஷன் ஆகாச கங்கா’ என்று குறிப்பிடப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்குப் பின்னர் இந்தத் திட்டம் உருவானது.

முன்னதாக, முதல் முறையாக மே 29 ஆம் தேதி திட்டமிடப்பட்ட இந்த விண்வெளிப் பயணம் ஏவுகணைப் பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷியப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ஏவுகலன் ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளால் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநி... மேலும் பார்க்க

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்... மேலும் பார்க்க

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆ... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முத... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மனிதர்களை விண்ணுக்கு அ... மேலும் பார்க்க