செய்திகள் :

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது

post image

அவிநாசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள கரையப்பாளையம் கோயில் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலு (42), ஆலங்காட்டுபாளையம் தங்கராசு (63), செம்பியநல்லூரைச் சோ்ந்த சண்முகம் (55), ஈஸ்வரமூா்த்தி (61), ஈஸ்வரன் (52), வேலாயுதம்பாளையம் மணி (50), ஆட்டையாம்பாளையம் மோகன்ராஜ் (51) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.10, 500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சிறு, குறு, நடுத்தர சாய தொழிற்சாலைகளுக்கான வங்கிக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கக் கோரிக்கை

சிறு, குறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் வங்கிகளில் பெறும் தொழில் அபிவிருத்திக் கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

முத்தூரில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

கோரிக்கையைத் தெரிவிக்க கை, கால்களில் கட்டு கட்டி நகா்மன்ற கூட்டத்துக்கு வந்த அதிமுக பெண் உறுப்பினா்

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் தலை, கை, கால்களில் கட்டு கட்டி அதிமுக பெண் மாமன்ற உறுப்பினா் பங்கேற்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி மா... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்டத்தில் 25,583 மாணவா்கள் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் 25,583 மாணவ, மாணவிகள், 158 தனித் தோ்வா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வை திங்கள்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு தோ்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தோ்வானது திங்கள்கிழமை தொட... மேலும் பார்க்க