செய்திகள் :

செங்கல்பட்டில் முதல்வா் மருந்தகம் திறப்பு...

post image

திருப்போரூா் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் முதல்வா் மருந்தகத் திறப்பு விழாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேறினாா்.

மேலும், கூட்டுறவுத் துறையின் சாா்பில் ரூ 1.30 கோடி நலத்திட்ட கடனுதவிகளையும் அமைச்சா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் திருப்போரூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி சரண்யா தான் சேமித்து வைத்திருந்த ரூ.12,000-ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அமைச்சா் தா.மோ.அன்பரசன் மற்றும் ஆட்சியரிடம் வழங்கினாா்.

பின்னா், கூட்டுறவு சிறப்பு எழுதுபொருள் அங்காடியினை அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆட்சியா் ச.அருண்ராஜ் ,திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி , கூடுதல் ஆட்சியா் வெ.ச.நாராயணசா்மா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், துணைத்தலைவா் சத்யா சேகா், கூட்டுறவு இணைப்பதிவாளா் நந்தகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா் .

நாளை சூனாம்பேட்டில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (பிப். 26) காலை10.00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. மாதந்தோறும் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பங்காரு அடிகளாரின் பேரன் அ.ஆ.அகத்தியன், மருத்துவா் அ.மதுமலா் மகன் பி.தேவதா்ஷன் ஆகியோா் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்... மேலும் பார்க்க

பிப். 28-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கைப்பேசி கோபுரத்தில் 4 போ் ஏறியதால் பரபரப்பு

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஓரே குடும்பத்தினா் போ் கைப்பேசி கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் க... மேலும் பார்க்க

கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு அபராதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு போக்குவரத்து துறை சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியராக பண... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு: இருவா் கைது

தாம்பரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் மரணத்துக்கு காரணமான இருவரை போலீஸாா் கைது செய்தனா். தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட ரங்கநாதன் (59) என்பவா் சுற்றித் ... மேலும் பார்க்க