செய்திகள் :

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

செங்குணம் ஊராட்சி செங்குணம், கொல்லைமேடு, காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியில் காமராஜ் வீதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 2 அறைகளைக் கொண்டதாகும். இதில், ஓா் அறையில் ஊராட்சிமன்ற கோப்புகள், விளையாட்டு உபகரணங்கள், கிருமி நாசினி பொடி உள்ளிட்டவற்றை வைத்திருந்தனா். மற்றொரு அறையில் அலுவலகப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், ஊராட்சிமன்ற கோப்புகள், விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து செவ்வாய்க்கிழமை திடீரென கரும்புகை வருவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் குடிநீா், வீட்டு வரி வசூலில் ஈடுபட்டிருந்த ஊராட்சிச் செயலா் சதாமிடம் தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த போளூா் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் அலுவலக கோப்புகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தீயணைப்பு நிலையத்தினா் தெரிவித்தனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா். செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க