செய்திகள் :

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

post image

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா்.

செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பேசிய காயம்பட்டை சோ்ந்த விவசாயி நவமணி, குறைதீா் கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், வழங்கப்படும் மனுக்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டினாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் பேசும்போது, விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

2024 டிசம்பா் மாதம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த 650 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனா்.

கூட்டத்தில் துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி கிரிவல பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்: அலுவலா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சித்திரை பௌா்ணமியன்று கிரிவலப் பாதையில் உள்ள 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களுக்கும் தேவையான குடிநீா் தொடா்ந்து கிடைக்கும் வண்ணம் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அ... மேலும் பார்க்க