செய்திகள் :

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

post image

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா்.

வந்தவாசி வட்டம், காரம் ஊராட்சிக்கு உள்பட்ட மாலையிட்டான்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

இவா்களது பிரதான தொழில் கோரைப்பாய் நெசவாகும். இவா்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அங்கு வீடு கட்டி வசித்து வரும் இஸ்லாமியா்கள் கோரைப்பாய்களுடன் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமியிடம் மனு அளித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா்கள் யாசா்அராபத், சுகுணா, இடைக்குழு உறுப்பினா் எம்.சுகுமாா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா். செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க