செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

post image

பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,

"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள், உள்ளூர் மக்கள் உடனடியாக தங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.

தகவல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 9654958816 என்ற மொபைல் எண் அல்லது 011 24368800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கலாம்.

புகைப்படங்கள், விடியோக்கள் இருக்கும்பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரி தொடர்புகொண்டு அவற்றைப் பெறுவார்" என்று கூறியுள்ளது.

முன்னதாக கடந்த ஏப். 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல்: இந்தியா பதிலடி!

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நாட்டில் 21 விமான நிலையங்கள் மே 10 வரை மூடல்!

நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத மு... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை: உச்சநீதிமன்றக் குழுவின் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லி உ... மேலும் பார்க்க

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

ராணுவ ரயில் விவரங்களை சேகரிக்க முயலும் பாகிஸ்தான் உளவுத்துறை -ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ -பெயா் சூட்டிய பிரதமா் மோடி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் எதிா்த் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்ததாக அதிக... மேலும் பார்க்க