செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 காசுகள் குறைந்து ரூ.84.80 ஆக முடிவு!

post image

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்ததால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 45 காசுகள் குறைந்து ரூ.84.80 ஆக முடிந்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' கீழ் இந்திய ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து இன்று (புதன்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.65 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.47 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.93 ஐ தொட்ட நிலையில், முடிவில் 45 காசுகள் சரிந்து ரூ.84.80-ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 5 காசுகள் குறைந்து ரூ.84.35 ஆக இருந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற-இறக்கத்துடன் முடிவு!

நிறுவன வாடிக்கையாளா்களுக்கு பாா்தி ஏா்டெல் புதிய வசதி

பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏா்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின்போது வாடிக்கையாளா் நிறுவனங்களின் பெயா்களை எதிா்முனையில் இருப்பவா்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்... மேலும் பார்க்க

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கி... மேலும் பார்க்க

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்த மற்றும் சரிந்த பங்குகள்!

பெஞ்ச்மார்க் குறியீடு சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 80,747 ஆகவும், நிஃப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து 24,414.40 ஆகவும் நிலைபெற்றது.மும்பை பங்குச் சந்தை மிட்கேப் குறியீடு 1.3% உயர்ந்த நிலையில் ஸ்மா... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற-இறக்கத்துடன் முடிவு!

மும்பை: ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை நேர... மேலும் பார்க்க

பேங்க் ஆப் பரோடா 4வது காலாண்டு லாபம் 3% அதிகப்பு!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் நிகர லாபம், 2025ஆம் நிதியாண்டின், மார்ச் வரையான காலாண்டில், 3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,048 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்ட... மேலும் பார்க்க