செய்திகள் :

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

post image

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் 2025 வரையிலான காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்.சி.ஆா், சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய எட்டு நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது. முந்தைய காலாண்டோடு (அக்டோபா்-டிசம்பா் 2024) ஒப்பிடுகையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் 4 சதவீதமும் வீடுகளின் சராசரி விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மும்பை எம்எம்ஆரில் சதுர அடிக்கு ரூ.12,600-ஆகவும், தில்லி-என்.சி.ஆரில் ரூ.8,106-ஆகவும், சென்னையில் ரூ.7,173-ஆகவும், புணேயில் ரூ.7,109-ஆகவும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது.எனினும், பெங்களூரில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,536-இலிருந்து ரூ.7,881-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. ஹைதராபாத்தில், ரூ.7,053-இலிருந்து ரூ.7,412-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. அகமதாபாத்தில், ரூ.4,402-இலிருந்து ரூ.4,568-ஆக 4 சதவீதமும், கொல்கத்தாவில் ரூ.5,633-இலிருந்து ரூ.5,839-ஆக 4 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக... மேலும் பார்க்க

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் ... மேலும் பார்க்க

ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!

சென்னை: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.வழக்கம் ப... மேலும் பார்க்க

யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!

புதுதில்லி: தனியார் வங்கியான யெஸ் வங்கியின் 13.19% பங்குகளை ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.85.41-ஆக முடிவு!

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ரூபாயின் சரிவை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது. டாலருக்கு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிவு!

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கடுமையாக சரிந்து வர்த்தகமானது.இன்... மேலும் பார்க்க