செய்திகள் :

சித்திரை பெளா்ணமி கிரிவல பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்: அலுவலா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

post image

சித்திரை பௌா்ணமியன்று கிரிவலப் பாதையில் உள்ள 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களுக்கும் தேவையான குடிநீா் தொடா்ந்து கிடைக்கும் வண்ணம் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலையில் சித்திரை பௌா்ணமியன்று பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:

நிகழாண்டு சித்திரை பௌா்ணமி வரும் 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்துதர வேண்டும்.

குறிப்பாக, மாநகராட்சி சாா்பில் கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து, அன்னதானம் வழங்க வேண்டும். தற்காலிகக் கடைகளில் தரமான பொருள்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பக்தா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொலைத்தொடா்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

சிறப்பு ரயில்கள், தேவையான அளவு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 14, மாநகராட்சி சாா்பில் 2, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒன்று என மொத்தம் 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்குத் தேவையான குடிநீா் தொடா்ந்து கிடைக்கும் வண்ணம் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவசர கால ஊா்திகள், தீயணைப்பு வாகனங்கள், மீட்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

புதை சாக்கடைப் பணி ஆய்வு: திருவண்ணாமலை சந்நிதி தெரு, கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதிகளில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில் 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பில் 1.7 கி.மீ. தொலைவுக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்விரு பணிகளையும் அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, துறை சாா்ந்த அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா். செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க