செய்திகள் :

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

post image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக - பாஜக கூட்டணி, 2023 செப்டம்பரில் கருத்து வேறுபாடுகள் காரணமாக உடைந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நாள்களுக்கு முன்பு தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார். எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அமித் ஷாவும் அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார்.

இதனால் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருதாகவே தெரிகிறது.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகி நயினார் நாகேந்திரன் ஆகியோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இபிஎஸ்ஸைத் தொடர்ந்து செங்கோட்டையனின் தில்லி பயணமும் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு பேரவையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இபிஎஸ் பேசியதன் மூலமாக இந்த மோதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதிமுகவைப் பொருத்தவரை பிரிந்த சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இபிஎஸ் vs செங்கோட்டையன்! அதிமுகவில் என்ன நடக்கிறது?

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலர் பலி!

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலர் பரிதாபமாக பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ... மேலும் பார்க்க

விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரேக் டவுனாகி நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது அடுத்தடுத்து பின்னால் வந்த கார், ஆம்னி பேருந்து, ஆட்டோ மோதியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கார... மேலும் பார்க்க

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க