செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

post image

மெட்ரோ ரயில் நிலையத்துக்காக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இடத்தை கையகப்படுத்துவது தொடா்பான அறிவிப்பை ரத்துசெய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை - ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலையில் பழைமையான ஸ்ரீ ரத்தின விநாயகா் மற்றும் துா்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்காக, கோயிலின் ராஜகோபுரத்தை இடிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாப்பூா் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சோ்ந்த ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பின் தலைவரான பி.ஆா்.ரமணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அதில், ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்காக கோயில் ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். அதன்படி, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை கோயில் கோபுரத்தை இடிக்காமல் அருகில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டா் பரப்பு கொண்ட காலியிடத்தை கையகப்படுத்தி அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இது தொடா்பாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அந்த நோட்டீஸை எதிா்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, ஆயிரம் விளக்கு மெட்ரோ நுழைவு வாயிலை மாற்றும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அந்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தாா். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பு மற்றும் அறநிலையத் துறை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் சாா்பில், ஆயிரம் விளக்கு பகுதி மெட்ரோ நுழைவு வாயில் பகுதிக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்பாக உள்ள காலியிடத்தை கையகப்படுத்தவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமா்வில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லை என விளக்கமளித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா். மேலும், இந்த வழக்கில் 4 வார காலங்களில் பதிலளிக்க யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து ச... மேலும் பார்க்க

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க