செய்திகள் :

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

post image

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் பினாகினி விரைவு ரயில் பிப். 24, 27, மாா்ச் 1 ஆகிய தேகிகளில் கூடூா் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும். டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் பிப். 23, 26, 28 ஆகிய தேதிகளிலும், அகா்தலா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரயில் பிப். 22, 25 ஆகிய தேதிகளிலும், திப்ரூகா் - மைசூா் பாகமதி விரைவு ரயில் பிப். 25-ஆம் தேதியும், பாட்னா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரயில் பிப். 27-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

ஜசிதிஹ் - பெங்களூரு விரைவு ரயில் மற்றும் புருலியா - திருநெல்வேலி விரைவு ரயில் பிப். 28-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும். மேலும், செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் பிப். 26-ஆம் தேதி சென்னை எழும்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க