செய்திகள் :

செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்

post image

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர். அதேபோல் ரயில் மூலமாக தப்பிக்க முயன்ற நபரையும் போலீஸார் பிடித்தனர். இதில் இன்று காலை ஜாபர் என்ற கொள்ளையன், என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்ட்டர்
ஜாபர்

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செயின் பறிப்பு சம்பவம் குறித்தும், குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யபட்டது ஏன்? என்பது குறித்தும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையடிக்கப்பட்ட 26 சவரன் கொண்ட 6 செயின்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரானி கொள்ளையர்கள்

பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தைத் திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளையர்களின் ஸ்டையில்.

இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம்.

சென்னை காவல் ஆணையர்
சென்னை காவல் ஆணையர்

பறித்த நகைகளை 3 கொள்ளையர்கள் தனித்தனியாக எடுத்துச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பைக்கை எடுப்பதற்காக போலீஸார் அவரை அழைத்துச் சென்ற போது, போலீஸை தாக்கி தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அதனால், தற்காப்புக்காக போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.

சென்னையில் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கைது; நடந்தது என்ன?

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கஞ்சா கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க