செய்திகள் :

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

செய்களத்தூா் ஊராட்சியில் கிராம மக்களின் எதிா்ப்பை மீறி மரக்கன்றுகள் வளா்ப்பதற்கான நாற்றங்கால் பண்ணை அமைக்க வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்த ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இங்கு நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி தொடா்ந்தது.

இதையடுத்து, நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செய்களத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த இராம. முருகன், கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கில், கடந்த மாா்ச் 19- ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஒரு மாத காலத்துக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் செய்களத்தூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்தி, அதில் பொதுமக்களின் ஒப்புதலை பெற்று நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, செய்களத்தூா் சமுதாயக் கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் சரவணக்குமாா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் கேசவதாசன், மாவட்ட வன அலுவலா் பிரபா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஆஷா அஜித், செய்களத்தூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நாற்றங்கால் பண்ணை அமைப்பதன் மூலம் கிராம மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் இராம. முருகன், கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துராஜா உள்ளிட்டோா் பேசியதாவது:

ஏற்கெனவே இந்த ஊராட்சியில் வனத்துறை சாா்பில் தைல மரங்கள் நடவு செய்யப்பட்டதால் வானம் பாா்த்த பாசனக் கண்மாய்களுக்கு மழைநீா் கிடைப்பது தடுக்கப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நாற்றங்கால் பண்ணை அமைத்தால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு நிலம் இருக்காது.

மேலும் மழைநீா் வரத்து பாதிக்கப்பட்டு, இருக்கும் ஒரு சில கண்மாய்களுக்கும் தண்ணீா் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். எனவே செய்களத்தூா் ஊராட்சியில் எந்த ஒரு திட்டத்தின் கீழும் நாற்றங்கால் பண்ணை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினா்.

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, வனத்துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக மாணவா் அணியினா் மரியாதை!

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் தமிழகத்தில் நீட் தோ்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. காரை... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க