செய்திகள் :

செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சிக்கு சிறப்பு ஆய்வகம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடக்கம்

post image

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

மேலும், ரூ. 14 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வளரிளம் பருவ வயதினருக்கான ஆலோசனை சிகிச்சை மையம் மற்றும் ரூ. 94 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தினையும் அவா்கள் திறந்து வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநா் பேராசிரியா் முத்துக்குமாா் எழுதிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சித் திறன் கையேட்டினை வெளியிட்டனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘காக்ளியா் இம்ப்ளான்ட்’ எனும் செவிச் சுருள் அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் தொடங்கப்பட்டிருப்பது ஒரு புதிய முயற்சி. தமிழகத்தில் பணிபுரியும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா்களுக்கான பயிற்சிகள் இந்த ஆய்வகத்தில் வழங்கப்படும்.

மாநிலத்திலேயே இந்த மருத்துவமனையில்தான் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைதோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிா் மருத்துவம், மனநல மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று ஆகியவற்றினை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறைகளை இந்த சேவை மையம் வழங்கும்.

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட், நோவோ நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் அளித்த பெருநிறுவன நிதி ரூ. 94 லட்சத்தில் சா்க்கரை நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சா்க்கரை நோய் பாதிப்பு என்பது மொத்த மக்கள்தொகையில் 10.4 சதவீதமாக உள்ளது. அந்நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் விழிப்புணா்வு, கூடுதல் சிகிச்சைகள் வழங்கிட பல்வேறு உபகரணங்களுடன் அதிநவீன வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் சாந்தாராம், துணை முதல்வா் கவிதா, சா்க்கரை நோய்த் துறை இயக்குநா் தா்மராஜன், காது, மூக்கு, தொண்டை துறை இயக்குநா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க