செய்திகள் :

``செவி வழி செய்தியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது.." - சீமான் குறித்து மனோ தங்கராஜ்

post image

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பதற்கு கடன் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து சங்கங்களையும் லாபகரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.

மனோ தங்கராஜ்

செயலிழந்த சங்கங்களை செயல்பட வைத்ததுடன் புதிதாக 2,484 சங்கங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் பல சங்கங்கள் லாபகரமாக செயல்பட முடியாத நிலையில்  சிரமப்பட்டு வருகிறார்கள்.

தனியார் கல்லூரி எம்பிஏ மாணவர்கள் உதவியுடன் நலிவடைந்த சங்கங்களை லாபகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கிராமப் பகுதிகளில் ஆவின் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பம்  எதிர்பாராதளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

ஆவின்

அதில் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கிறது. மனிதவளம் முக்கியம். அதை வைத்து நாம் தொழில்நுட்பத்தை கையாள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாலின் தரம் நன்கு உயர்ந்துள்ளது.

சீமான் போராட்டத்தை மட்டுமல்லாமல், இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். விமர்சனம் செய்பவர்கள் முன்னேற்றத்தை பற்றியும் பேச வேண்டும். பாலில் கொழுப்பை சேர்த்தோம், டிட்டர்ஜென்ட் சேர்த்தோம் என்று விமர்சனம் செய்தார்கள். அப்படி சொன்னவர்கள் இப்போது வாயடைத்து போயுள்ளார்கள்.

சீமான்
சீமான்

வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை நிச்சயம் ஏற்கிறோம். அரசியல் தலைவர்கள் செவி வழி செய்திகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது. நன்கு ஆராய்ந்து பேச வேண்டும். அதுதான் அறிவுக்கு அழகு.” என்றார்.

"மதுரைக்குப் போகாமலேயே முருகர் அருள் கிடைத்துவிட்டது" - வேலைப் பரிசாக வாங்கிய இபிஎஸ் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பரிவு தேசிய பொதுச் செயலாளர் வி.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் ... மேலும் பார்க்க

சிவசேனா தொடக்கத் தினம்: "என்னை வந்து சாகடியுங்கள்" - வார்த்தை போரில் உத்தவ் - ஷிண்டே; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா தொடக்கத் தினம் சிவசேனாவின் இரண்டு அணிகள் சார்பாகக் கொண்டாடப்பட்டது.தனித்தனியாக நடந்த பொதுக்கூட்டங்களில் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பாமக MLAகள்: "உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடையக் கூட்டுப் பிரார்த்தனை" - அன்புமணி

பா.ம.க உட்கட்சி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இதனால் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாக... மேலும் பார்க்க

``NDA கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை EPS தான் முடிவு செய்வார்" - கே.பி.ராமலிங்கம்

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்தார். `நடந்தாய் வாழி காவிரி' திட்டம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி... மேலும் பார்க்க

``பணி நேரம் முடிந்து விட்டது'' - ஏக்நாத்ஷிண்டே வந்த விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் அருகில் உள்ள மத ஊர்வலகத்தில் கலந்து கொண்டுவிட்டு மும்பைக்கு திரும்ப தயாரானார். அவர் மும்பையில் இருந்து ஜல்காவிற்கு புறப்பட தயாரானபோது அவரது விமானத்தில்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: உத்தவ்-ராஜ் தாக்கரே கூட்டணி? பேச மறுக்கும் ஷிண்டே; உத்தவ் சூசகம்!

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா உடைந்த பிறகு தாக்கரே குடும்பத்திற்கு சிவசேனா கிடைக்காமல் போய்விட்டது. கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் சிவசேனாவின் பெ... மேலும் பார்க்க