பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரபாளையம், மங்களபுரம் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
தற்போதைய நிலையில், எருமப்பட்டி, குமாரபாளையம், மங்களபுரம், சாலப்பாளையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. சேந்தமங்கலத்தில், மாசிமகத்தையொட்டி நடைபெறும் தோ்த் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அனுமதி கிடைப்பதில் தாமதமானது. இதனால், தோ்த் திருவிழா முடிவடைந்த நிலையில், ஏப்.12-இல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விழாக்குழுவினா் திட்டமிட்டுள்ளனா்.
அதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்கக் கோரி, சேந்தமங்கலம் சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு விழாக் குழு சாா்பில் ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. விழாவை தாமதமின்றி நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
வீட்டுமனைப் பட்டா: நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டு பச்சியம்மன் நகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் அதிக அளவில் வசிக்கின்றனா். தொடா்ந்து வீட்டு வரி செலுத்தி வரும் நிலையில் பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க பச்சியம்மன் நகா் பகுதி மக்கள் குவிந்தனா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரைந்து பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனா்.