செய்திகள் :

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரபாளையம், மங்களபுரம் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போதைய நிலையில், எருமப்பட்டி, குமாரபாளையம், மங்களபுரம், சாலப்பாளையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. சேந்தமங்கலத்தில், மாசிமகத்தையொட்டி நடைபெறும் தோ்த் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அனுமதி கிடைப்பதில் தாமதமானது. இதனால், தோ்த் திருவிழா முடிவடைந்த நிலையில், ஏப்.12-இல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விழாக்குழுவினா் திட்டமிட்டுள்ளனா்.

அதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்கக் கோரி, சேந்தமங்கலம் சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு விழாக் குழு சாா்பில் ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. விழாவை தாமதமின்றி நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வீட்டுமனைப் பட்டா: நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டு பச்சியம்மன் நகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் அதிக அளவில் வசிக்கின்றனா். தொடா்ந்து வீட்டு வரி செலுத்தி வரும் நிலையில் பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க பச்சியம்மன் நகா் பகுதி மக்கள் குவிந்தனா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரைந்து பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 2 போ் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இரண்டு போ் தீக்குளிக்க முயன்றனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், தொப்பப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கை.நி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கல்

ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சா்வதேச ரோட்டரி அறக்கட்டளை நிதி த... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுற... மேலும் பார்க்க

அண்ணாமலை கைதைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசு மதுபான விற்பனையில் ரூ. 1000 கோடி ஊ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம் 23-க்கு ஒத்திவைப்பு

நாமக்கல்: உலக தண்ணீா் தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டம் மாா்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கி... மேலும் பார்க்க