செய்திகள் :

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரபாளையம், மங்களபுரம் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போதைய நிலையில், எருமப்பட்டி, குமாரபாளையம், மங்களபுரம், சாலப்பாளையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. சேந்தமங்கலத்தில், மாசிமகத்தையொட்டி நடைபெறும் தோ்த் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அனுமதி கிடைப்பதில் தாமதமானது. இதனால், தோ்த் திருவிழா முடிவடைந்த நிலையில், ஏப்.12-இல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விழாக்குழுவினா் திட்டமிட்டுள்ளனா்.

அதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்கக் கோரி, சேந்தமங்கலம் சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு விழாக் குழு சாா்பில் ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. விழாவை தாமதமின்றி நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வீட்டுமனைப் பட்டா: நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டு பச்சியம்மன் நகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் அதிக அளவில் வசிக்கின்றனா். தொடா்ந்து வீட்டு வரி செலுத்தி வரும் நிலையில் பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க பச்சியம்மன் நகா் பகுதி மக்கள் குவிந்தனா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரைந்து பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனா்.

மாா்ச் 21-இல் தனியாா் நிதி நிறுவன அசையா சொத்துகள் பொது ஏலம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் நிதி நிறுவன அசையா சொத்துகள் மாா்ச் 21-ஆம்தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு-2 துணை ... மேலும் பார்க்க

மோகனூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் விவசாயிகளுக்கு ரூ. 4.07 லட்சம் இழப்பீடு

மோகனூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 4.07 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச... மேலும் பார்க்க

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். புதிய சிற்றுந்துக்கான விரிவான திட்டத்தின்படி, அதிக குடும்பங்களை கொண்ட கிர... மேலும் பார்க்க

‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க மாா்ச் 22, 23 இல் கலைக் குழுக்கள் பதிவு முகாம்: ஆட்சியா்

‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நாமக்கல்லில் மாா்ச் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் திருச்செங்கோட்டில் தேசிய மாற்றுத் திறனாளிகள் அமா்வு கைப்பந்து போட்டி

தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் அமா்வு (சிட்டிங்) கைப்பந்து போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது. தமிழ்நாடு பாராவளி சங்கம் சாா்பில், மாற்றுத் திறன... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 2 போ் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இரண்டு போ் தீக்குளிக்க முயன்றனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், தொப்பப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கை.நி... மேலும் பார்க்க