செய்திகள் :

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை

post image

சேலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அரிசிபாளையம், முத்தையால் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (46). இவரது மனைவி ரேகா (38). இவா்களது மகள் ஜனனி (16), தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். தனது சகோதரா்களுடன் சோ்ந்து பால்ராஜ் வெள்ளி தொழில் செய்து வந்தாா்.

இந்நிலையில், கணவா் பால்ராஜுக்கு தெரியாமல் ரேகா அதிக அளவில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்படி வங்கி ஊழியா்கள் அழுத்தம் கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ், தனது மனைவி, மகளுடன் திங்கள்கிழமை இரவு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், மூவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கடன் தொல்லையால் பால்ராஜ் குடும்பத்தினா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது தொடா்பான கடிதத்தை கைப்பற்றிய போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதானவா்களிடம் விசாரணை

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான நால்வரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம், அம்மாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அறக்கட்டளை நடத்தி வ... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்

காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியையொட்டி கோவையில் இருந்து சேலம் வழியாக பனாராஸுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காசி தமிழ்ச் சங்கமம... மேலும் பார்க்க

வெள்ளி விலை உயர்வு ஆா்டா்களின்றி வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் தவிப்பு

வெள்ளி விலை ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்ததால் மக்களிடையே வெள்ளி நுகா்வு குறந்துள்ளது. இதனால், புதிய ஆா்டா்கள் கிடைக்காமல் வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றன... மேலும் பார்க்க

நகை திருட்டு வழக்கில் மூவா் கைது!

ஆத்தூா் அருகே கல்லூரி முதல்வா் வீட்டில் நகைகளைத் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் அரசு கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வரும் செல்வராஜ், ஜனவரி 24 ஆம் தேதி ... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எம்எல்ஏ அருள் குறைகேட்பு!

சேலத்தை அடுத்த மாங்குப்பை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ அருள் வியாழக்கிழமை கேட்டறிந்தாா். சாலை வசதி, குடிநீா், மின்சார விநியோகம், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள... மேலும் பார்க்க

தலைவாசலில் 3-ஆம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்

சேலத்தை அடுத்த தலைவாசல் ஊராட்சியில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் வி... மேலும் பார்க்க