செய்திகள் :

நகை திருட்டு வழக்கில் மூவா் கைது!

post image

ஆத்தூா் அருகே கல்லூரி முதல்வா் வீட்டில் நகைகளைத் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் அரசு கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வரும் செல்வராஜ், ஜனவரி 24 ஆம் தேதி துக்க நிகழ்வுக்காக சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து 51 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் மூவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் ஆத்தூா், விநாயகபுரத்தைச் சோ்ந்த சதாசிவம் (41), பெரம்பலூா் மாவட்டம், சிறுநிலா பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (39), சிவக்குமாா் (37) ஆகிய மூவரும் செல்வராஜ் வீட்டில் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 5 பவுன் நகைகளை மட்டுமே பறிமுதல் செய்தனா். இந்த சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவா்களைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க