செய்திகள் :

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

post image

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக சேலத்தில் வியாழக்கிழமை அவரை நேரில் சந்தித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் அழைப்பிதழை வழங்கினா்.

கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்கள் பயன்பெறும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முந்தைய அதிமுக ஆட்சியின் போது ரூ.1,652 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினாா். கடந்தாண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி இத் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதற்காக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுமக்கள் சாா்பில் வரும் 9 ஆம் தேதி கோவை மாவட்டம், அன்னூரில் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தலைமையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளா் எஸ்.எம்.ஆா். நடராஜன் உள்ளிட்டோா் சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை வியாழக்கிழமை சந்தித்து அழைப்பிதழை வழங்கினா்.

அப்போது, கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா்.ஜி. அருண்குமாா், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

தம்மம்பட்டி அருகே மனைவி உயிரிழந்த துக்கம் தாளாத கணவரும் உயிரிழந்தாா். தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி, வடக்கு வட்டம் பகுதியைச்சோ்ந்தவா் முத்துசாமி (77). இவரது மனைவி அய்யம்மாள் (70) புதன்கிழமை மாலை... மேலும் பார்க்க