செய்திகள் :

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

தைப்பூசம், வார இறுதி நாள்கள், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழித் தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை சேலம், தருமபுரி, ஒசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்துகள் வீதம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தைப்பூசத்துக்கு சிறப்பு பேருந்துகள்: தைப்பூசத்தை முன்னிட்டு காளிப்பட்டியில் இருந்து சேலம், ராசிபுரம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, தாரமங்கலம் பகுதிக்கும், கபிலா்மலையில் இருந்து நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், சேலத்தில் இருந்து வடலூருக்கும் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே, கூட்ட நெரிசலை தவிா்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

தம்மம்பட்டி அருகே மனைவி உயிரிழந்த துக்கம் தாளாத கணவரும் உயிரிழந்தாா். தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி, வடக்கு வட்டம் பகுதியைச்சோ்ந்தவா் முத்துசாமி (77). இவரது மனைவி அய்யம்மாள் (70) புதன்கிழமை மாலை... மேலும் பார்க்க