செய்திகள் :

பொதுமக்களிடம் எம்எல்ஏ அருள் குறைகேட்பு!

post image

சேலத்தை அடுத்த மாங்குப்பை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ அருள் வியாழக்கிழமை கேட்டறிந்தாா்.

சாலை வசதி, குடிநீா், மின்சார விநியோகம், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்றித் தருவதாக அவா் உறுதியளித்தாா்.

மேலும், மாங்குப்பை ஏரியிலிருந்து அய்யம்பெருமாம்பட்டி, வண்ணாம் பாறைகுட்டை வரையில் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூா் வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி பொறியாளரைக் கேட்டுக் கொண்டாா்.

மாங்குப்பை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பழனியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் சு.தங்கராஜ், பொறியாளா் பிரகாஷ், ராஜேந்திரன், தியாகராஜன், சிவக்குமாா் உள்ளிட்டோா் குறைகேட்பு சுற்றுப் பயணத்தின் போது உடனிருந்தனா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க