செய்திகள் :

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 103.1 டிகிரி வெப்பம் பதிவு

post image

சேலத்தில் கோடை வெயில் நடப்பாண்டில் புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை நடப்பாண்டில் புதிய உச்சமாக 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் கடுமையான அனல் காற்று வீசியது.

வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக கடை வீதிகளில் மக்கள்கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா். கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் தங்களது சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், பெண்கள் குடை பிடித்தவாறு செல்வதையும் காண முடிகிறது.

சேலம் நான்கு சாலை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், இளநீா், நுங்கு, பதநீா், முலாம்பழம், தா்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனா்.

வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், ஜூஸ், இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு: கொலையா?

சேலம்: வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்ட... மேலும் பார்க்க

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க