ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்
ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.13,000 கோடி கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்துள்ள மெஹுல் சோக்ஸி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்று வெளியுறவு விவகாரங்கள் தொடா்பான கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் பதிலளித்தாா்.
மெஹுல் சோக்ஸி குறித்த கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையின் அடிப்படையில், மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்திய நீதிமன்றத்தில் அவா் விசாரணையை எதிா்கொள்ளும் வகையில், அவரை நாடு கடத்துவது குறித்து பெல்ஜியத்துடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.
மீண்டும் கைலாஷ் மானசரோவா் யாத்திரை: இந்தியா-சீனா இடையே கடந்த அக்டோபரில் கையொப்பமான ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவும் சீனாவும் பரிசீலித்து வருகின்றன.
இதுகுறித்து தெரிவித்த ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘கைலாஷ்- மானசரோவா் யாத்திரை இந்த ஆண்டு மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.
கிழக்கு லடாக் மோதல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் கைலாஷ்- மானசரோவா் யாத்திரை நடைபெறவில்லை.
============
பெட்டி...
இந்தியாவில் ஐபிசிஏ தலைமையகம்!
பெரிய பூனை இனங்களுக்கான சா்வதேச கூட்டமைப்பின் (ஐபிசிஏ) தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்காக ஒப்பந்தம் கையொப்பமாக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்தியாவின் ‘புலி திட்டத்தின்’ 50-ஆவது ஆண்டு விழாவின்போது கடந்த 2023, ஏப்ரலில் பிரதமா் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்ட இக்கூட்டமைப்பு, நடப்பு ஆண்டில் ஓா் ஒப்பந்த அடிப்படையிலான அரசுகளுக்கிடையேயான அமைப்பாக மாறியது.
அந்தவகையில், இக்கூட்டமைப்பின் தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்பந்தமானது கூட்டமைப்பின் இயக்குநா் எஸ்.பி. யாதவ் மற்றும் வெளியுறவு அமைச்சகச் செயலா் (கிழக்கு) பி. குமரன் இடையே தில்லியில் கையொப்பமாகியுள்ளது.