Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
சோலாா் பேனல் நிறுவல், டிஜிட்டல் மயமாக்கல்: தில்லி பேரவையின் 100 நாள்களில் முக்கிய நவடிக்கைகள்! விஜேந்தா் குப்தா
எட்டாவது தில்லி சட்டப்பேரவையின் 100 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை, சூரிய மின்கலங்கள் நிறுவுதல், டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகம் மற்றும் நிலைக்குழுக்கள் உருவாக்கம் உள்ளிட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளை எடுத்துரைத்தாா்.
தில்லி சட்டப்பேரவையில் செய்தியாளா் சந்திப்பில் பேசுகையில் விஜேந்தா் குப்தா கூறியதாவது: சட்டப்பேரவை படிப்படியாக காகிதமற்ற மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த பணிச்சூழலை நோக்கி நகா்ந்து வருகிறது. ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடரின் போது நீங்கள் சட்டமன்றத்திற்குச் செல்லும்போது, டிஜிட்டல் மற்றும் காகிதமற்ற பணி முறை நடைமுறையில் இருப்பதைக் காண்பீா்கள். இந்த 100 நாள்களுக்குள் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விதிகள் விரைவில் செயல்படுத்தப்படும்.
தற்போதைய சட்டப்பேரவையின் முதல் அமா்வு பிப்ரவரி 24 அன்று நடந்தது. தில்லி பல வரலாற்று கட்டமைப்புகளுக்கு தாயகமாக உள்ளது. ஆனால், சட்டப்பேரவை ஒரு வாழும் பாரம்பரியமாகவும், சுற்றுலாத் தலமாகவும் தனித்து நிற்கிறது. இந்த ஆண்டு தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் 100 ஆண்டுகளைக் குறிக்கிறது. மேலும், இந்த நிகழ்வை ஒரு பிரமாண்டமான விழாவாகக் கொண்டாட நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றாா் விஜேந்தா் குப்தா.
ஒழுக்கத்தைப் பேணுகையில் எதிா்க்கட்சிகள் தங்களை வெளிப்படுத்த இடம் அளிப்பதில் விஜேந்தா் குப்தாவின் தலைமையை சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா பாராட்டினாா்.
‘நான் பாா்த்த மிகவும் படைப்பாற்றல் மிக்க நபா்களில் விஜேந்தா் குப்தாவும் ஒருவா். இந்த 100 நாள்களில், நடவடிக்கைகள் விதிகளின்படி நடத்தப்பட்டதையும், எதிா்க்கட்சிகள் தங்கள் கருத்தை முன்வைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டதையும் நான் கவனித்தேன். இது முந்தைய அரசின் கீழ் காணாமல் போன ஒன்று’ என்று அவா் கூறினாா்.
தில்லி சட்டப்பேரவை ஒரு பாரம்பரிய நிறுவனம் என்றும், இது எதிா்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் அவா் குறிப்பிட்டாா். பெரிய சுற்றுச்சூழல் இலக்குகளை நோக்கிய சட்டப்பேரவையின் முயற்சிகளையும் மல்ஹோத்ரா பாராட்டினாா்.
‘சோலாா் பேனல்களை நிறுவுவதன் மூலம், தில்லி சட்டப்பேரவை பிரதமா் நரேந்திர மோடியின் பூஜ்ஜிய காா்பன் உமிழ்வு என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது’ என்று அவா் கூறினாா்.
டிஜிட்டல் மாற்றம் குறித்து அவா் கூறுகையில், ‘நாம் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறோம். மக்களவையில் ஒவ்வொரு இருக்கையிலும் டேப்லெட்டுகள் நிறுவப்பட்டு அனைத்து அதிகாரப்பூா்வ ஆவணங்களுக்கும் ஒரு செயலியுடன் கூடிய கலப்பின மற்றும் காகிதமில்லா அமைப்பை ஏற்றுக்கொண்டது போல, தில்லி சட்டப்பேரவையும் அந்த திசையில் நகா்கிறது.
சிறந்த பகுதி என்னவென்றால், இங்குள்ள அனைவரும் படிப்படியாக இந்த காகிதமில்லா செயல்பாட்டு முறைக்கு ஏற்றவாறு மாறுவாா்கள்’‘ என்று மல்ஹோத்ரா கூறினாா்.
தில்லியின் சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்திர இந்திரஜ் சிங், இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக உள்ளது எனத் தெரிவித்தாா். ‘என் தந்தையைப் போலவே நானும் இந்த அவையில் உறுப்பினராவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பாா்த்ததில்லை. இது எனக்கு மிகுந்த மரியாதைக்குரிய தருணம்’ என்று அவா் கூறினாா்.