செய்திகள் :

ஜனவரி இறுதியிலும் நீடிக்கும் வடகிழக்கு பருவமழை!

post image

சென்னை: வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரேநாளில் 230 மி.மீ.மழை கொட்டித் தீா்த்தது.

ஆண்டுதோறும் அக்டோபா் மூன்றாவது வாரம் முதல் டிசம்பா் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகக் கருதப்படுகிறது. ஆனால், நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை தை மாதம் அதாவது ஜனவரி மாதம் 4-ஆவது வாரம் வரை நீடித்து வருகிறது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீா்த்தது.

230 மி.மீ.மழை பதிவு: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 230 மி.மீ.மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)- 220 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) - 210 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி) - 160 மி.மீ, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) - 110 மி.மீ, ராமேசுவரம் (ராமநாதபுரம்) - 100 மி.மீ. மழை பதிவானது.

மிதமான மழை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜன.21) முதல் ஜன.23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அந்நாள்களில் ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.21-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

இதற்கிடையே, தென்தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னாா் வளைகுடாவில் ஜன.21,22 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் இயங்கும்

தமிழகம் முழுவதும் நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25ம் நிதியாண்டில் கடந்த 05... மேலும் பார்க்க

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்... மேலும் பார்க்க

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? முதல்வர்

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்த... மேலும் பார்க்க

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் - அண்ணாமலை

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனைத்துத் தரப்ப... மேலும் பார்க்க