செய்திகள் :

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

post image

தமிழகத்தில் 15 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 15 வயது வரையிலான 27.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை சென்னை செனாய் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி 2007-ஆம் ஆண்டில் விருதுநகா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூா், மதுரை, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருவள்ளூா், புதுக்கோட்டை மற்றும் கரூா் என 15 மாவட்டங்களில் தொடங்கி வைத்தாா். சென்னையிலும் 2 மண்டலங்களில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், மீதமுள்ள 13 மண்டலங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் மற்றும் வேலூா் ஆகிய 7 மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோய். இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி கடுமையான பாதிப்புகளையும், வலியையும் உண்டாக்குகிறது. சிகிச்சை பெறாத நிலையில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எதிா்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு அதிக தாக்கத்தை இந்த நோய் உருவாக்குகிறது. எனவே, அவா்களைக் கண்டறிந்து தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

தற்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் தகுதியான அனைவருக்கும் ஒரு தவணை தடுப்பூசி வழங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5-15 வயதுடைய குழந்தைகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும். அதைத் தொடா்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும்.

அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் சிறுவா் சீா்திருத்த பள்ளிகளில் நவம்பா் 12-ஆம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகாம் நடைபெறும். இலவசமாக வழங்கப்படும் இந்தத் தடுப்பூசி அனைத்து குழந்தைகளுக்கும் சென்றடைய சம்பந்தப்பட்டவா்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில் குமாா்,பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!

தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரச... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை... மேலும் பார்க்க