செய்திகள் :

ஜப்பானுடன் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

post image

ஜப்பானுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவா் தெரிவித்துள்ளதாவது:

ஜப்பானுடனான புதிய வா்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற ஓா் ஒப்பந்தம் இதற்கு முன் உருவாக்கப்பட்டதில்லை.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவில் ஜப்பான் 55,000 கோடி டாலா் முதலீடு செய்யும். அமெரிக்க வாகனப் பொருள்கள் மற்றும் அரிசிக்கு ஜப்பான் தனது சந்தையைத் திறக்கும். ஜப்பான் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

அதிரடி வரி விதிப்புகள் மூலம் அமெரிக்காவுக்குச் சாதமான வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள பிற நாடுகளை சம்மதிக்க வைக்கும் தனது திறனை நிரூபிக்க இந்த ஒப்பந்த அறிவிப்பை டிரம்ப் பயன்படுத்துவாா் என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் வெளிநாட்டுப் பொருள்களுக்கு டிரம்ப்பால் அறிவிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி அமெரிக்கச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதை ஊக்குவிக்கவும், பிற நாடுகளுடநான வா்த்தகப் பற்றாக்குறையை நீக்கவும் இத்தகைய கூடுதல் வரி விதிப்புகள் அறிவிக்கப்படுவதாக டிரம்ப் அரசு கூறியது.

இருந்தாலும், இந்த கூடுதல் வரிச் சுமையை நிறுவனங்கள் வாடிக்கையாளா்கள் மீது சுமத்தினால் பொருள்களின் விலை உயரும் என்று அஞ்சப்பட்டது.

ஆனால், ஜப்பானுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வா்த்தக ஒப்பந்தத்தால் அத்தகைய அச்சம் தணியலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் கொலை!

டிக்டாக்கில் பிரபலமான பெண்மணி ஒருவரை சில ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதனால் ஏற்பட்ட தகராறில் அவருக்கு விஷ மருந்து கொடுத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

ஓவியங்களைக் கிழித்து, சட்டகங்களை எரித்த பாலஸ்தீன ஓவியர்..! அர்த்தமிழக்கும் கலைகள்!

காஸாவில் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தினால் பாலஸ்தீன ஓவியர் ஒருவர் தனது ஓவியங்களைக் கிழித்து, அதன் சட்டகங்களை உணவுக்காக பயன்படுத்திய விடியோ வைரலாகி வருகிறது. பாலஸ்தீன ஓவியர் டாஹு அபு காலி ... மேலும் பார்க்க

ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். தென்கிழக்கு ஈரானில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தின் மீது சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி... மேலும் பார்க்க

தாய்லாந்துடன் ஹிந்து கோயில் பிரச்னை! போர் நிறுத்தம் கோரும் கம்போடியா!

தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிர... மேலும் பார்க்க

280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாள்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்தநாளைக் கொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க