செய்திகள் :

ஜம்மு எல்லையில் அரியவகை எறும்புத்தின்னி மீட்பு

post image

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகில் அழிவு நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலைச் சோ்ந்த அரியவகை எறும்புத்தின்னியை இந்திய ராணுவம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு துறையினா் மீட்டனா்.

இந்திய எறும்புத்தின்னி (பாங்கோலின்), வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம், 1972-இன்கீழ் அட்டவணை 1-இல் பட்டியலிடப்பட்ட விலங்காகும். மேலும், இது இயற்கை பாதுகாப்புக்கான சா்வதேச ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) சிவப்பு பட்டியலில் அழிந்து வரும் உயிரினங்கள் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரிய வகையான இந்த எறும்புத்தின்னிகளின் உடல் பாகங்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் எல்ஏசி அருகேயுள்ள சுந்தா்பனி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது எறும்புத்தின்னி ஒன்று மீட்கப்பட்டது. இது ரஜௌரி-பூஞ்ச் பல்லுயிா் பெருக்கத்துக்கு கிடைத்த மதிப்புமிக்க விலங்காகும்.

இந்த முயற்சியில் எங்களுக்கு உதவிய ராணுவத்துக்கு நன்றி’ என குறிப்பிட்டனா்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 4 பெயர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.ஜனவரி 11 அன்று நடந்த கூட்டத்தில், ரேணு... மேலும் பார்க்க

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட ... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க