செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது: ஃபரூக் அப்துல்லா

post image

ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அரசிடம் எதிா்பாா்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தங்கள் கட்சி ஆட்சி அமைத்து ஓராண்டுதான் ஆகிறது என்றும் அவா் கூறினாா்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசு மக்களின் பங்களிப்புடன் சிறப்பான நிா்வாகத்தை கட்டமைத்து வருகிறது. இந்த அரசு 5 ஆண்டுகளுக்குள் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைத்து ஓராண்டுதான் கடந்துள்ளது. அதற்கு ஜம்மு-காஷ்மீரில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒரே இரவில் மாற்றங்கள் ஏற்படுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம்.

கடந்த 10 ஆண்டுகளாக நமது பிராந்திய வளா்ச்சியில் தடைப்பட்டிருந்தது. திடீரென மாயாஜாலம் செய்து வளா்ச்சியைக் கொண்டு வந்துவிட முடியாது. அது ஒரு தொடா் நடவடிக்கையாகும். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் தேசிய மாநாட்டுக் கட்சி உறுதியாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரை அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்தார்.ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கர... மேலும் பார்க்க