செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

post image

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜம்மு பகுதி, இமாச்சலப் பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பஞ்சாபில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஐம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண் போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன. இதனால் பள்ளத்தாக்கிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மாறிவரும் வானிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர், பலர் குல்மார்க் போன்ற பிரபல இடங்களுக்குச் சென்று பனிப்பொழிவைக் கண்டு மகிழ்ந்தனர்.

இந்தாண்டு யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏழு நாள்களில் பெய்த மழை மற்றும் பனிப்பொழிவால் மக்களிடையே வறட்சி ஏற்படும் அச்சத்தைத் தணித்துள்ளது. ஆறுகள், ஓடைகள், ஏரிகள், நீரூற்றுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 50 நாள்கள் நீடித்த வறட்சி காரணமாக வறண்டு கிடந்த சில வற்றாத நீரூற்றுகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

'சில்லாய் கலன்' என்று அழைக்கப்படும் 40 நாள் நீண்ட கடுமையான குளிர்காலக் காலத்தில் ஏற்படும் இந்த பனிப்பொழிவுதான் மலைகளில் உள்ள வற்றாத நீர் தேக்கங்களை நிரப்புகிறது. பள்ளத்தாக்கில் உள்ள மக்களுக்குக் குடிப்பதற்கு உள்பட ஏராளமான தண்ணீரை வழங்குகிறது.

மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தனது அனுபவத்தைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். நாங்கள் காஷ்மீரின் குளிரை அனுபவிக்க வந்துள்ளோம். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. குல்மார்க்கில் பனிப்பொழிவைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைத்தது, இது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. நாங்கள் இரண்டு நாள்கள் அங்கேயே தங்கியிருந்ததாக அவர் கூறினார். அனைவரும் நிச்சயமாக வர வேண்டிய ஓர் இடம் என்று அவர் கூறினார்.

காஷ்மீரில் குளிர்ந்த காலநிலையை மக்கள் அதிகம் விரும்புவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. படகு சவாரிகள், உள்ளூர் உணவு வகைகள் மற்றும் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி, ஸ்ரீநகரில் 4.9 டிகிரி செல்சியஸ், குல்மார்க் -4.3 டிகிரி, பஹல்காம் -0.8 என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜம்மு நகரில் 12.4 டிகிரி செல்சியஸ், கத்ரா நகரில் 7.8 டிகிரி, படோட் 4.7, பனிஹால் 3.6 மற்றும் பதேர்வா 3.4 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் பதிவானது.

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள... மேலும் பார்க்க

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க