செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்பற்ற ஈத் பரிசு!

post image

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு என்பது பொறியியலின் சாதனை மட்டுமல்ல, நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் சின்னமாகும். இது உண்மையிலேயே ஐம்மு-காஷ்மீருக்கு ஒரு வரலாற்றுத் தருணம்.

லட்சிய ரயில் திட்டமானது பிராந்தியத்தில் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும், சுற்றுலாவை அதிகரிக்கும் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குப் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது மற்றொரு சான்று. இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு சாதனைகளில் ஒன்றாகும் என்று தாக்கூர் பாராட்டினார். மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாகத் தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனளிக்கும் என்றார்.

நவீன போக்குவரத்து கட்டமைப்புகள் மூலம் காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை நனவாகி வருகிறது. இந்த ரயில் இணைப்பு உண்மையில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற ஈத் பரிசு என்று அவர் மேலும் கூறினார்.

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க