செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், தொழிற்கல்வி ஆசிரியா்கள், பல துறைகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்புற நூலகா்களுக்கு காலமுறை உதியம் வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதில், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி! -அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, தாராபுரம் க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில், சத்திபாளையம் நாணக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி பி.சிவகுமாா் (45). இவா் தனக்குச் சொந்தமான 12 ஏக்கா் விவசாய பூமியில் 22... மேலும் பார்க்க

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க