செய்திகள் :

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நக்சல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டதால், பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நக்சல்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கொன்றதாக மனைவி வாக்குமூலம்! என்ன நடந்தது?

முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் வருகைதந்திருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்துள்ளனர்.நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வருகைதந்துள்ள அமெரிக்க து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரப் பள்ளிகளில் ஹிந்தி சேர்ப்பு: மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு!

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆ... மேலும் பார்க்க

இந்திய தேர்தல் முறையில் தவறு இருக்கிறது: ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அ... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர்!

நான்கு நாள்கள் பயணமாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தில்லி வந்தடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் அவருடன் இந்தியா வந்துள்ளனர்.தில்லி பாலம் விமான நில... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி! என்ன நடந்தது?

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.சொத்துப் பிரச்னைக் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சமையறையில் இருந்த இரண்டு கத்தியால் ஓம்... மேலும் பார்க்க