செய்திகள் :

"ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்' சாமானிய மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை: ஆம் ஆத்மி விமர்சனம்

post image

நமது நிருபர்

ஜிஎஸ்டி புதிய வரி அமைப்பு முறையானது பணக்காரர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் சாமானிய மக்கள் மீது அதிக சுமையை சுமத்துவதாகவும் உள்ளது என்று ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை விமர்சித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் "ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்' அறிவிப்பைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இவ்வாறு விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி "பச்சத் உத்சவ்' அறிவித்துள்ளார். மக்கள் உண்மையை மறந்து விடுகிறார்கள். பிரதமர் இதுபோன்ற ஒன்றை அறிவிக்கும்போதெல்லாம், அது சாமானிய மக்களின் நலனுக்கானது அல்ல. இதற்கு ஒரு நல்ல உதாரணம் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைதான். அந்த நடவடிக்கைக்கைக்குப் பிறகு, வரிசையில் காத்திருந்தபோது அந்தக் கொண்டாட்டங்களில் 100 பேர் தங்கள் உயிரை இழந்தனர்.

கடந்த 8 ஆண்டுகளில், ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூலம் மத்திய அரசு ரூ.127 லட்சம் கோடியை வசூலித்துள்ளது. இதில், 64 சதவீத சுமை 50 சதவீத மக்கள் மீது விழுகிறது. மேல்தட்டு 10 சதவீத பணக்காரர்களிடமிருந்து மூன்று சதவீதம் மட்டுமே வரி வசூல் வந்துள்ளது.

இது பச்சத் (சேமிப்பு) உத்சவம் அல்ல; இது ஒரு சபத் (ஏமாற்றும்) உத்சவம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 கோடி சிறு தொழில்களை மூடுவதற்கு வழிவகுத்தது. தற்போது சுதேசி குறித்து அரசு பேசி வருகிறது.

நவராத்திரியின் முதல் நாளில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை, பொருள் வாங்குபவர்களுக்கான பச்சத் உத்சவம் என்று பிரதமர் விவரித்தார். இது பல்வேறு வகையான பொருள்களின் விலைகளைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றபோது வர்த்தகர்களுடனான தனது உரையாடலின் விடியோவைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, இந்த மாற்றம் நாட்டில் வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறியிருந்தார்.

திருத்தப்பட்ட இரண்டு அடுக்கு ஜிஎஸ்டியின் கீழ், பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகள் இப்போது 5 சதவீதம் அல்லது 18 சதவீத வரிக்குள் வருகின்றன. அதே நேரத்தில் அதிக ஆடம்பர பொருள்கள் 40 சதவீத வரிப் பிரிவிலும் புகையிலை பொருள்கள் 28 சதவீதம் மற்றும் செஸ் விகிதத்திலும் உள்ளன.

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க

சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை

நமது நிருபர்தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்ற முதல்வர் ரேகா குப்தா, தலைநகரில் சொத்துகளின் அழகை சிதைப்பது பொறுத்துக் கொள்ளப்படாது என்றார்.அரசியல் தொண்டர்கள் எந்த சொ... மேலும் பார்க்க

ராம்லீலா, துர்கை பூஜை விழாக்களைநள்ளிரவு வரை கொண்டாட அனுமதி: முதல்வர் தகவல்

நமது நிருபர்ராம்லீலா மற்றும் துர்ûகா பூஜை போன்ற கலாசார நிகழ்வுகளை நள்ளிரவு வரை தொடர தனது அரசு அனுமதித்துள்ளதாகவும், "ராமராஜ்யம் தில்லியில் வர வேண்டும்' என்றும் அதற்காக "நாம் அனைவரும் கொஞ்சம் வேலை செய்... மேலும் பார்க்க

ஜாலி எல்.எல்.பி 3 படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை!

ஜாலி எல்.எல்.பி 3 படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் செப்டம்பர் 19 அன்று வெளியான “ஜாலி எல்.எல்.பி 3” திரைப்ப... மேலும் பார்க்க

தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!

தில்லியில் பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவி மரணமடைந்து 18 நாள்களாகியும் காவல்துறை தரப்பி... மேலும் பார்க்க

நடுவா் மன்றங்களிலும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம்: நீதிபதி சூா்யகாந்த்

நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு மாற்றாக கருதப்பட்ட நடுவா் மன்றங்களிலும் தற்போது பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உச்... மேலும் பார்க்க