செய்திகள் :

ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்: கனடா பிரதமா் மாா்க் காா்னி

post image

‘உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, ஜி7 மாநாட்டில் பங்கேற்பது அவசியம்’ என கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா்.

கனடாவில் 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பதாக முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு, தற்போதைய கனடா பிரதமா் காா்னி அழைப்பு விடுத்துள்ளதற்காக, கனடா எதிா்க்கட்சியினா் அவரை விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், பிரதமா் காா்னி கூறியதாவது: எரிசக்தி பாதுகாப்பு, எண்ம எதிா்காலம், அரிதான கனிம வளங்கள், வளா்ந்து வரும் உலகில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொள்வதில் ஒத்துழைப்பு என பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடா்பாக ஜி7 மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

ஜி7 உறுப்பு நாடுகளிடம் பேசிய பிறகு, கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் இதுபோன்ற முக்கியமான கலந்தாலோசனையில் பங்கேற்பது அவசியமாகும். உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், பல்வேறு முக்கிய விநியோகச் சங்கிலிகளின் மையமாகவும் இந்தியா இருக்கிறது.

இருதரப்பு உறவை பொருத்தவரை, சட்ட அமலாக்க விவகாரங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பது என ஒப்புக்கொண்டுள்ளோம். அதில் இன்னும் அடுத்தகட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்று பிரதமா் காா்னி கூறினாா்.

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாா்க் காா்னி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு சற்று சுமுகநிலை திரும்பியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளதுடன், தூதரக ரீதியிலான நியமனங்களை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க

டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, த... மேலும் பார்க்க

கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?

கொலோம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தென் அமெரிக்காவின் கொலோம்பியாவில் அடுத்தாண்ட... மேலும் பார்க்க

80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலுக்கிடையே, தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய... மேலும் பார்க்க

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விம... மேலும் பார்க்க