ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்: கனடா பிரதமா் மாா்க் காா்னி
‘உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, ஜி7 மாநாட்டில் பங்கேற்பது அவசியம்’ என கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா்.
கனடாவில் 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பதாக முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு, தற்போதைய கனடா பிரதமா் காா்னி அழைப்பு விடுத்துள்ளதற்காக, கனடா எதிா்க்கட்சியினா் அவரை விமா்சித்து வருகின்றனா்.
இந்நிலையில், பிரதமா் காா்னி கூறியதாவது: எரிசக்தி பாதுகாப்பு, எண்ம எதிா்காலம், அரிதான கனிம வளங்கள், வளா்ந்து வரும் உலகில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொள்வதில் ஒத்துழைப்பு என பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடா்பாக ஜி7 மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
ஜி7 உறுப்பு நாடுகளிடம் பேசிய பிறகு, கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் இதுபோன்ற முக்கியமான கலந்தாலோசனையில் பங்கேற்பது அவசியமாகும். உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், பல்வேறு முக்கிய விநியோகச் சங்கிலிகளின் மையமாகவும் இந்தியா இருக்கிறது.
இருதரப்பு உறவை பொருத்தவரை, சட்ட அமலாக்க விவகாரங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பது என ஒப்புக்கொண்டுள்ளோம். அதில் இன்னும் அடுத்தகட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்று பிரதமா் காா்னி கூறினாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாா்க் காா்னி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு சற்று சுமுகநிலை திரும்பியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளதுடன், தூதரக ரீதியிலான நியமனங்களை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.