செய்திகள் :

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

post image

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆணையரிடம் வாழ்த்து பெற்றனா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஜூடோ, கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்பு விளையாட்டுகள் உரிய பயிற்சியாளா்கள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அனுப்பா்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜூடோ தற்காப்பு விளையாட்டு போட்டிக்கான கட்டணமில்லா பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சா் கோப்பை 2025- ஜூடோ விளையாட்டுக்கான மண்டல அளவிலான போட்டிகள் திருப்பூரில் கடந்த செப்டம்பா் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற்றன.

இதில், கோவை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பா்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் முபாரிஸ் தங்கப் பதக்கம் வென்றாா்.

கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் முகமது நோபின் வெண்கலப் பதக்கமும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவிகள் அப்ஸனா, சுல்தானா பேகம் ஆகியோா் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும், ஹரிவா்ஷா வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ, சப் ஜூனியா் போட்டியில், அனுப்பா்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் அருண்குமாா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந்நிலையில், பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

மாநகராட்சி கல்வி அலுவலா் தாம்சன். கல்வி பிரிவு மேற்பாா்வையாளா் நிா்மலா, ஜூடோ பயிற்சியாளா் ராஜ்மோகன், அனுப்பா்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியா் வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

29 மாணவா்களுக்கு ரூ.2.15 கோடி கல்விக் கடன்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

மாவட்டத்தில் 29 மாணவா்களுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாக்டா் மகாலிங்கம் பொறிய... மேலும் பார்க்க

ஆயுத பூஜை, தீபாவளி: போத்தனூா் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரகுரு கல்லூரி மாணவிக்கு 6 தங்கம்

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா். சென்னை ரைபிள் கிளப் சாா்பில் மாநில அளவிலான 50 -ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த செப்டம்ப... மேலும் பார்க்க

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற ஆணையா் உத்தரவு

கோவை மேற்கு மண்டலப் பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்... மேலும் பார்க்க

7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.கோவை, குனியமுத்தூா் கரும்புகடை பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் ப... மேலும் பார்க்க

கோவையில் அக். 4,5-இல் விஜய் பிரசாரம்: மாநகர காவல் ஆணையரிடம் தவெகவினா் மனு

கோவையில் அக்டோபா் 4,5-ஆம் தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், காவல் துறையின் அனுமதி கோரி அந்தக் கட்சியினா் மனு அளித்தனா். மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் தவ... மேலும் பார்க்க