செய்திகள் :

ஜூன் 6 பொது விடுமுறையா? பரவும் பொய் தகவல்கள்; உண்மையில் பக்ரீத் விடுமுறை எப்போது?

post image

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர்.

இந்த பதிவுகளால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். முக்கியமாக பக்ரீத் என்றும் அழைக்கப்படும் ஈத் அல்-அதா எப்போது கொண்டாடப்படுகிறது என்பதில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பக்ரீத் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால், இஸ்லாமிய மாதம் துல் ஹஜ்ஜாத்தின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவும் பொய்!

சமூக வலைதள பதிவு ஒன்று, நாளை நாடுமுழுவதும் பொது விடுமுறை எனக் கூறுகிறது.

மற்றொரு பதிவில், மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பெரும்பான்மையான மாநிலங்களிலும் விடுமுறை எனக் கூறப்படுகிறது.

ஒருபடி மேலே சென்று ஐ.எஸ்.ஹெச் என்ற யூடியூப் சேனல், மக்களின் மன நலனுக்கு ஆதரவளிப்பதற்காக அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்ததாகக் கூறியது. சிலர் வானியல் நிகழ்வு காரணமாக வெள்ளி அன்று விடுமுறை என்றும் கூறுகின்றனர்.

இந்த தவறான தகவலைப் பரப்ப பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த பதிவுகளால் குழப்பமடைந்த மக்கள் கோர்க், சேட் ஜிபிடி போன்ற ஏஐ-களைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

ஜூன் 6 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை எனக் கூறப்படுவது முற்றிலும் தவறான ஒன்று. மத்திய அரசு எந்த விடுமுறையையும் அறிவிக்கவில்லை.

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை நாட்குறிப்பின் படி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 6ம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் கேரள அரசு அந்த நாளில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் பள்ளிகள், வங்கிகள், அரசு நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்.

நாடுமுழுவதும் பக்ரீத் விடுமுறை எப்போது?

பக்ரீத் ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அந்த நாள் மாதத்தின் முதல் சனிக்கிழமையாக இருந்தாலும் நாடுமுழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆனால் அஹமதாபாத், கங்டாக், இட்டாநகர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் உள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

உப்பை உண்டு, புனித நூல்கள் மீது சத்திய பிரமாணம்! - எல்லைகளைப் பாதுகாக்க கிளம்பும் 500 அக்னி வீரர்கள்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் ... மேலும் பார்க்க

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டங்களை ஞாயிறுக்கு தள்ளி வையுங்கள்" - எச்சரித்த காவல்துறை; அணி நிர்வாகம் சொன்ன காரணம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பிய முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னசாமி மைதானத்துக்கு வெளியி... மேலும் பார்க்க

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் ... மேலும் பார்க்க

`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தின... மேலும் பார்க்க