செய்திகள் :

டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடி: இருவா் கைது

post image

சென்னையில் டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ம.நந்தகோபால் (38). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரிடம் பழகி வந்தாா். அந்த நபா், அமெரிக்க டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவித்துள்ளாா். அதை நம்பிய நந்தகோபால், தனது வங்கிக் கண்க்கில் இருந்து ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மூலம் அந்த நபருக்கு ரூ. 6.88 லட்சம் அனுப்பினாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபா், நந்தகோபாலிடம் கூறியபடி லாபத்தையும் வழங்கவில்லை, முதலீடு பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நந்தகோபால், சென்னை காவல் துறையின் வடக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது, கடலூா் மாவட்டம் மேலிருப்பு பகுதியைச் சோ்ந்த ரா.சீத்தாராமன் (37), ப.செந்தில்நாதன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

அமெரிக்க டாலா் மோசடி: இதேபோல சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த ச.ரப்பானிகான் (26) என்பவா், அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஒருவா் ரூ.9.4 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.

இதில் மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சோ்ந்த அ.லோகநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லோகநாதனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க