செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவு!

post image

மும்பை: அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நேர்மறையான தாக்கம் உள்ளிட்ட காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.39ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.42 ஐ தொட்ட நிலையில், முடிவில் 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28-ஆக முடிவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.88.35 என்ற குறைந்த அளவில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!

The Indian rupee recovered from all-time lows and settled for the day higher by 7 paise at 88.28 against the US dollar on Friday.

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

கொல்கத்தா: ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்கு பிறகு தேவையை அதிகரிக்கும் என்றது டிவிஎஸ் மோட்டார்ஸ்.புதிய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு, டிவிஎஸ் 150 சிசி ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!

மும்பை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய சந்தை ஏற்றத்திற்கு ஏற்ப இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான செ... மேலும் பார்க்க

பண்டிகைக் காலம் ஆரம்பம்! சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!!

பண்டிகைக் காலம் தொடங்கியிருக்கும் நேரத்தில், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும், மக்கள் தங்களுக்குப் பிடித்த போன்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு ஏற்ப பல சலுகைகளை அறிவித்துள்ளன.இந்த விழாக் காலத்தில், மக... மேலும் பார்க்க

கடன் தவணை செலுத்தாவிட்டால் செல்போன் முடக்கம்!! ஆர்பிஐ புதிய விதி

புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்காக, நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தாவிட்டால், செல்போன்களை முடக்குவதற்கு வகை செய்யும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கி வருவதாகத் தகவல்கள் த... மேலும் பார்க்க

எல் & டி சாதனை! பெண்களால் இயக்கப்பட்ட 100 டன் டிரக்!

எல் & டி நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் 100 டன் எடைகொண்ட டிரக்கை இயக்கி சாதனை புரிந்துள்ளனர்.இந்தியாவில் சுரங்கம் மற்றும் கட்டுமானத் துறையில் ஒரு சாதனையாக 100 டன் எடைகொண்ட ராட்சத டிரக்கை பெண்கள் மட்ட... மேலும் பார்க்க

5-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு!

இந்த வாரத்தில் 5-வது நாளும்(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,758.95 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் த... மேலும் பார்க்க