செய்திகள் :

டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுமாறு ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை!

post image

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பரிந்துரைக் குழுவுடன், இந்திய உயர் அதிகாரிகள் இன்று மிகக் குறிப்பிடத்தக்க சந்திப்பை ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் எதிர்ப்பு முன்னணி (TRF) என்ற டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட வேண்டும் என்று வலியுறுத்தியதோடூ, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் ஒரு கிளையாக அதன் நிறுவப்பட்டுள்ளதையும், அதன் பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடர்பையும் விரிவாக விவரித்துள்ளனர்.

மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் டிஆர்எஃப் அமைப்புக்கு இருக்கும் தொடர்புகளை உறுதி செய்யும் ஆவணங்களையும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் கையெழுத்துகள், நிதிப் பரிமாற்றம், உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு உள்ளிட்ட அனைத்துக்குமான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விளக்கக் கூட்டத்தில், பாகிஸ்தானிலிருந்து இந்த பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றிய தெளிவான புரிதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரைக் குழுவிற்கு வழங்குவதை இந்தியா முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு டிஆர்எஃப் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்தார்.ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கர... மேலும் பார்க்க